பள்ளிவாசல்களுக்கு நோன்பு திறக்க பேரிச்சை பழம் இலவசம்!!!



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ளம் கொண்ட ஜமாத் நிர்வாகிகளே , பள்ளிவாசல் இமாம்களே , சமுதாய ஊழியர்களே இந்த மடல் உங்கள் அனைவரையும் தெளிவான மார்க்க சிந்தனையுடனும் , உகந்த உடல் நலத்துடனும் சந்திகட்டுமாக !
 தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறம் மற்றும் நகரப்புறங்களில் எவ்வித வசதி மற்றும் வருமானம் இல்லாமல், நோன்பு திறக்கும் ஏற்பாடுகளை செய்ய முடியாத நிலையில் உள்ள பள்ளிவாசல்களுக்கு வெளிநாடுகளில் வாழும் சமுதாய தனவந்தர்களின் சார்பாக பேரிச்சை பழம் பள்ளிவாசல்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுகிறது.

எனவே எவ்வித பொருளாதார பின்புலமும் இல்லாத பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் , இமாம்கள் , சமுதாய ஊழியர்கள் எங்களை எங்களது வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு தங்களது கடிதத்துடன் பள்ளிவாசலின் முகவரியை தலைவர் அல்லது பள்ளிவாசல் இமாமின் கைப்பேசி எண்ணுடன் அனுப்பினால் உரிய வகையில் விசாரித்து , தகுதியான பள்ளிவாசல்களுக்கு நோன்பு திறப்பதற்கான பேரிச்சை பழம் இன்ஷா அல்லாஹ் எவ்வித கட்டணமும் இல்லாமல் நன்மையை மட்டும் நாடி அனுப்பி வைக்கப்படும்.

மேலும் இந்த நன்மையை அள்ளித்தரும் பணிகளில் இணைத்து கொள்ள எங்களை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு நன்கொடையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

தயவு செய்து இச்செய்தியை அதிகம் அதிகமாக பரப்பவும்...

தொடர்புக்கு:
அல்ஹாஜ் மௌலவி எம் ஏ முஹம்மது அப்துல்லாஹ்  அன்வாரி
போன் தொடர்பு எண்: 9003423979
வாட்ஸ் ஆப் (இந்தியா) : +91-8438987374

A2Z எலக்ட்ரானிக்ஸ்
பத்தாஹ் , ரியாத்
சவுதி அரேபியா
வாட்ஸ் ஆப் (சவுதி): +966569542322

Post a Comment

0 Comments