எதிரே வந்த லாரியுடன், பைக் மோதல்! ஆர்.புதுப்பட்டினம் வாலிபர் ஒருவர் பலி: நண்பர்கள் படுகாயம்



புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே பைக்கில் சென்றவர் லாரி மோதி இறந்தார். இருவர் படுகாயமடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம்  மீமிசலை அடுத்த ஆர்.புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்  நாகூர் மகன் விஜய் (28). வெளிநாட்டில் வேலைபார்த்துவந்த இவர் கடந்த 10 நாள்களுக்கு முன் விடுமுறையில் வந்தார்.

வெள்ளிக்கிழமை இரவு இவர் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் காளீஸ்வரன் மகன் அனுசீலன் (26), கிருஷ்ணன் மகன் உன்னிகிருஷ்ணன் ஆகியோருடன் பைக்கில் கட்டுமாவடி அடுத்த வல்லவன்பட்டினம்  பகுதியில் நடந்த திருவிழாவுக்குச் சென்றார்.

கண்டனிவயல்  பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது எதிரே வந்த  லாரியுடன், பைக்  மோதியதில்  விஜய் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

படுகாயமடைந்த அனுசீலன், உன்னிகிருஷ்ணன்   ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மணமேல்குடி போலீஸார் சடலத்தைஅறந்தாங்கி மருத்துவமனை அனுப்பிவைத்து  வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Post a Comment

0 Comments