புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்! மாவட்ட ஆட்சியர் தகவல்



புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள வாக்குச்சாவடி பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வரும் மே 2 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு உள்ளாட்சிகளுக்கான சாதாரணத் தேர்தல் 2019-க்காக உத்தேச வாக்குச்சாவடிகள் பட்டியல் கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது.  இந்தப் பட்டியல் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

Post a Comment

0 Comments