கோபாலப்பட்டினத்தில் நவாஸ் கனிக்கு ஆதரவாக தமுமுக-வின் மூத்த தலைவர் குணங்குடி R.M.ஹனிபா அவர்கள் வாக்கு சேகரிப்பு!



மனித நேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் குனங்குடி ஹனிபா அவர்களின் தலைமையில் 07/04/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திமுக கூட்டனி கட்சிக்கு ஆதரவாக கோபாலப்பட்டினம் ஜமாத்தார்களை சந்தித்து  வாக்குகள் சேகரிக்கப்பட்டது.




அப்போது அவர் பேசியது, திமுக,காங்கிரஸ் கட்சியின் கூட்டணி வேட்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த நவாஸ்கனி போட்டியிடுகிறார். மத்தியில் பாஜக ஆட்சியை தோல்வி அடைய செய்ய மாநிலத்தில் திமுக கூட்டனி அதிகப்படியான இடங்களை பிடிக்க வேண்டும். கடந்த 5 வருடத்தில் நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலைக்கு வந்துவிட்டது. வேலை வாய்ப்பின்மை, சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட துரோகம், படுகொலைகள், குழந்தைகள் ஆகியவற்றை மனதில் நிறுத்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சி கூட்டனியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

இதில் கோபாலப்பட்டினம் ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் கோபாலப்பட்டினம், R.புதுப்பட்டினம், தமுமுக மற்றும் மமக, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர் .

தகவல்
தமுமுக ஊடக பிரிவு
கோபாலப்பட்டினம் கிளை
மீமிசல் பகுதி
ஆவுடையார் கோவில் ஒன்றியம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

Post a Comment

0 Comments