அரசங்கரை அருகே தடை செய்யப்பட்ட 10 கிலோ கடல் மண்புழுக்கள் பறிமுதல்



புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் கடற்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஏனாதி  கிராமத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 10 கிலோ கடல் மண்புழுக்கள் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.

ஏனாதி கிராமத்தில்  அரசால் தடைசெய்யப்பட்ட  கடல் மண்புழுக்களை சிலர் எடுப்பதாக  கிடைத்த தகவலின்பேரில்  திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பா. ரகுபதி, தலைமைக் காவலர் பா. ராதாகிருஷ்ணன், மற்றும் முதல் நிலைக் காவலர் கோ. ரெங்கநாதன் உள்ளிட்டோர் அரசரங்கரை  சோதனைச் சாவடி அருகே ரோந்து சென்றனர்.

அப்போது  அவ் வழியே வந்த டாடா ஏஸ் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட  ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள  10 கிலோ கடல் மண்புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தையும், அதில் இருந்த   12 பேரையும் மேல் நடவடிக்கைக்காக அறந்தாங்கி வனத்துறை வனவர்  என். ஷமீர் அஹமது வசம் ஒப்படைத்தனர்.

Post a Comment

0 Comments