புதுக்கோட்டையில் நாளை 5ம் தேதி இலவச உடல்பருமன் விழிப்புணர்வு முகாம்



புதுக்கோட்டையில் இலவச உடல்பருமன் விழிப்புணர்வு முகாம் வருகிற 5ம்தேதி நடைபெறுகிறது. இதில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர்.

உடல் பருமனால் அவதிப்படுவோருக்கு ஒரு இனிய செய்தி. 21ம் நூற்றாண்டில் உடல் பருமன் நோய் என்பது நோய் வாழ்க்கை முறை நோய்களான சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, மூட்டுவலி, இதயநோய்கள், குறட்டை, குழந்தையின்மை, சிலவகை புற்றுநோய்களுக்கும் வழிகாட்டியாக விளங்குகிறது.

தற்போது குணப்படுத்த முடியாத உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு உடல்பருமன் அறுவைசிகிச்சை ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கிறது. இப்பொழுது இந்த அறுவை சிகிச்சையானது தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் உயிர் காக்கும் அறுவை சிகிச்சையாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு உலக புகழ்பெற்ற கோவை ஜெம் மருத்துவமனை நம் புதுக்கோட்டையில் எஸ்விஎஸ் சீதையம்மாள் திருமண மண்டபம், புது பஸ்ஸ்டாண்ட் அருகில் வருகிற 5ம் தேதி (ஞாயிறு) காலை 9 மணிக்கு சிறப்பு உடல்பருமன் அறுவை சிகிச்சை விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.

 இதில் சிறப்பு உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் பிரவீன்ராஜ் மற்றும் டாக்டர் சரவணக்குமார் தலைமையில் மருத்துவக்குழுவினர் ஆலோசனை வழங்குகின்றனர்.

முகாமில் கலந்துகொண்டு அதிக உடல் எடையால் குறட்டை, மூட்டுவலி, மலட்டுத்தன்மை, கட்டுப்பாடற்ற சர்க்கரைநோய், உயர்ரத்த அழுத்தம் போன்ற ஆபத்தான நோய்களில் இருந்து விடுபட்டு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றிடலாம். 

இங்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் உடல்பருமன் அறுவை சிகிச்சையை ஒரு ரூபாய் செலவின்றி செய்து பயன்பெற்றிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments