அரசநகரிப்பட்டினம் வளர்பிறை நற்பணி மன்றம் சார்பாக 60 பயனாளிகளுக்கு பித்ரா அரிசி விநியோகம்



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த அரசநகரிப்பட்டினத்தில் வளர்பிறை நற்பணி மன்றம் சார்பில் ரமலான் பண்டிகையையொட்டி, அரசநகரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த நலிவடைந்த ஏழை, எளிய குடும்பங்களுக்கு பித்ரா அரிசி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கணவரால் கைவிடப்பட்டோர்,  விதவை,  முதியோர், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 60 ஏழை குடும்பங்களுக்கு ரூ. 91,000 ஆயிரம் மதிப்பில் பித்ரா அரிசி மற்றும் பொருட்கள் 12-வது ஆண்டாக அரசநகரிப்பட்டினம் வளர்பிறை நற்பணி மன்றம் நிர்வாகிகள் விநியோகித்தனர்.




தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : ஆசிக் இக்பால், மன்றத்தின் மக்கள் செய்தி தொடர்பாளர்

Post a Comment

0 Comments