ஜெகதாப்பட்டிணத்தில் இறந்து கரை ஒதுங்கிய கடல்பசு



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகதாப்பட்டிணம் கிராமத்தில் சுமார் 6 அடி நீளமுள்ள  கடல்பசு அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. இதை பார்த்த அப்பகுதியினர் உடனே அறந்தாங்கி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.


கால்நடை மருத்துவர் திரு.பாலகிருஷ்ணன் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறந்தாங்கி வனச்சரகர் திரு.ராஜசேகரன் மற்றும் திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ரகுபதி ஆகியோர் முன்னிலையில் சம்பவ இடத்திலே மீனவர்கள் உதவியுடன் புதைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments