ஆர்.புதுப்பட்டினத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை



தமிழகத்தில் நிலவிவரும் கடும் வரட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அன்றாட அத்தியாவசிய தண்ணீர் கூட கிடைக்காமல் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.


இந்த இன்னல்கள் நீங்க படைத்த இறைவனிடம் மழை வேண்டி கோரிக்கை வைக்கும் சிறப்புப் பிரார்த்தனைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் கிளைகள் வாரியாக செய்துவருகின்றது. அதன் ஓர் அம்சமாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை (மழைத் தொழுகை) நேற்று முன்தினம் 20/06/2019 வியாழக்கிழமை அதிகாலை 6.30-க்கு நடத்தப்பட்டது.


இதில் கிளை தலைவர் அலி முஹம்மது, கிளை செயலாளர் அமீர் பாட்சா, கிளை பொருளாலர் சேக் அப்துல்லாஹ், கிளை துணை செயலாளர் குலாம் முஹம்மது பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த மழை சிறப்பு பிராத்தனையை இமாம் நூர் முகம்மது நடத்தி வைத்தார்.

இதில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.

காவிரி நீரை தமிழகத்திற்கு தேவையான அளவு திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசிற்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.

குளம், ஏரி, கன்மாய் போன்ற நீர்நிலைகளை முறையாக தூர்வாரி மழைகாலங்களில் தண்ணீர் சேமிக்கும் வழிகளை எளிதாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது.

தகவல்: பதூர்

Post a Comment

0 Comments