புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த கோபாலப்பட்டினத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆலமரம் அருகில் இருந்த கிரிக்கெட் மைதானத்தை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுற்றி கம்பி வேலி அமைத்து ஊர் நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஈத்கா மைதானத்தில் பெருநாள் திடல் தொழுகையும், பெண்களுக்கான பெருநாள் தோப்பும் நடைபெற்று வருகிறது. இந்த ஈத்கா மைதானம் பெருநாளைக்கு முன்னர்தான் சில சமூக ஆர்வலர்கள் ஒன்றினைந்து சில இடங்களில் முன்னர் சேதப்படுத்தப்பட்டிருந்த கம்பி வேலியை 25 கள்ளுக்கால் மற்றும் இரண்டு கம்பி ரோல் கொண்டு சரிசெய்தனர்.
ஆனால் இந்த ஈத்கா மைதானத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியை இரண்டாவது பெருநாளான நேற்று 06/06/2019 இரவு சுமார் 7.30 மணியளவில் சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதோடு, அதில் இருந்த கள்ளுக்கால்களை உடைத்து போட்டு சென்றுள்ளனர். இது போன்ற இழிவான செயல்களை சில இளைஞர்கள் செய்வது வருந்தத்தக்க செயலாக உள்ளது.
மேலும் கோபாலப்பட்டினத்தில் உள்ள அநேக இடங்களில் இது போன்ற சமூக விரோத போக்குகளில் ஈடுபடுகிறார்கள் என்பது ஊர் மக்களின் குற்றசாற்றாகவும் மற்றும் கவலையாக உள்ளது. நடை பயிற்சி மேற்கொள்ளும் முதியவர்களும், விளையாட வரும் மாணவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்ந்து வரும் கிராமங்களில் கோபாலப்பட்டினம் கிராமமும் ஒன்று.
பெருமைமிக்க இந்த ஈத்கா மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளாக சில விஷமிகள் வேண்டும் என்றே மரங்களையும் மற்றும் இரும்பு வேலியையும் உடைத்து போன்ற சில கீழ்தரமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். பெருநாள் தோப்பிற்கு இளைஞர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் ஆத்திரமடைந்த விஷமிகள் சுற்று வேலியை உடைத்து கீழ்தரமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே இதுபோன்ற சமூக விரோதிகளை இனம் கண்டு அவர்களுக்கு தக்க தண்டனையை ஜமாத் நிர்வாகம் வழங்க வேண்டும் என்பதே ஊர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதற்கு கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் ?
இந்த ஈத்கா மைதானத்தில் பெருநாள் திடல் தொழுகையும், பெண்களுக்கான பெருநாள் தோப்பும் நடைபெற்று வருகிறது. இந்த ஈத்கா மைதானம் பெருநாளைக்கு முன்னர்தான் சில சமூக ஆர்வலர்கள் ஒன்றினைந்து சில இடங்களில் முன்னர் சேதப்படுத்தப்பட்டிருந்த கம்பி வேலியை 25 கள்ளுக்கால் மற்றும் இரண்டு கம்பி ரோல் கொண்டு சரிசெய்தனர்.
ஆனால் இந்த ஈத்கா மைதானத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியை இரண்டாவது பெருநாளான நேற்று 06/06/2019 இரவு சுமார் 7.30 மணியளவில் சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதோடு, அதில் இருந்த கள்ளுக்கால்களை உடைத்து போட்டு சென்றுள்ளனர். இது போன்ற இழிவான செயல்களை சில இளைஞர்கள் செய்வது வருந்தத்தக்க செயலாக உள்ளது.
மேலும் கோபாலப்பட்டினத்தில் உள்ள அநேக இடங்களில் இது போன்ற சமூக விரோத போக்குகளில் ஈடுபடுகிறார்கள் என்பது ஊர் மக்களின் குற்றசாற்றாகவும் மற்றும் கவலையாக உள்ளது. நடை பயிற்சி மேற்கொள்ளும் முதியவர்களும், விளையாட வரும் மாணவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்ந்து வரும் கிராமங்களில் கோபாலப்பட்டினம் கிராமமும் ஒன்று.
பெருமைமிக்க இந்த ஈத்கா மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளாக சில விஷமிகள் வேண்டும் என்றே மரங்களையும் மற்றும் இரும்பு வேலியையும் உடைத்து போன்ற சில கீழ்தரமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். பெருநாள் தோப்பிற்கு இளைஞர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் ஆத்திரமடைந்த விஷமிகள் சுற்று வேலியை உடைத்து கீழ்தரமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே இதுபோன்ற சமூக விரோதிகளை இனம் கண்டு அவர்களுக்கு தக்க தண்டனையை ஜமாத் நிர்வாகம் வழங்க வேண்டும் என்பதே ஊர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதற்கு கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் ?
1.தண்டனையா
2.சமரசமா
நிர்வாகத்தின் மீது நம்பிக்கை உள்ளது. என்ன தண்டனைகள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
புகைப்படம் உதவி: அல்லாபிச்சை
புகைப்படம் உதவி: அல்லாபிச்சை
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.