கோபாலப்பட்டினம் ஊர் மக்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் (படங்கள்)



இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 04/06/2019 அன்று ரமாலன் மாதம்   நோன்பு 29 நிறைவடைந்த நிலையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு பிறை தேடப்பட்டது.


அதன் அடிப்படையில் ஷாவ்வால் பிறை 05/06/2019  பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டது.

05/06/2019 அன்று புதன்கிழமை கோபாலப்பட்டினம் ஈத்கா மைதானத்தில் காலை 6.30 மணிக்கு பயான் நடைபெற்றது. பிறகு 7.00 மணியளவில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. அதன் பிறகு குத்பா உரை, தூஆக்கள் செய்யப்பட்டது.

இதில் ஊர் மக்கள், பெரியோர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் என ஏறாளமானோர் கலந்து கொண்டு கோபாலப்பட்டினம் ஈத்கா மைதானத்தில் தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாள் கொண்டாடினார்கள்.

மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.

புகைப்படங்கள் கீழே












































Post a Comment

0 Comments