R.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் ஆலோசனை கூட்டம்



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ஒன்றியம் மீமிசல் அருகில் உள்ள R.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்  ஆலோசனை கூட்டம் 08/06/2019 அன்று அல் அமீன் வளாகத்தில் மன்றத் தலைவர்  A.கலந்தர் பாட்ஷா மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது, அதில் மன்ற செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாணவரணி செயலாளர் s.முகமது முபாரக் அவர்கள் இறை வசனம் ஒதினார் அதனைத் தொடர்ந்து நல்லொழுக்கம் என்னும் தலைப்பில் பகுருதீன் ஆலிம் அவர்கள் உரையாற்றினார்கள் அதன் பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் :

 1) மன்றத்தின் துணைச் செயலாளராக A.முகமது அப்துல்லா மற்றும் M.ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டனர்.

 2) மன்றத்தின் உறுப்பினர் அட்டை அனைவருக்கும் ஹஜ் பெருநாளைக்குள் ஏற்பாடு செய்வது.

 3) தொழுகை நேரங்களில் மன்ற திடலில் யாரும் விளையாடக் கூடாது.

 4) ஹஜ்ஜுப் பெருநாள் கூட்டு குர்பானி திட்டம் கடந்த ஆண்டைப் போல் செயல்படுத்துவது.

 5) மன்ற வளாகத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு சம்பளத்துக்கு ஒரு நபரைத் நியமிப்பது.

 இறுதியாக மன்றச் செயலாளர் T.அப்துல்லா அவர்கள் நன்றி தெரிவித்தார்.

என்றும் சமுதாய பணியில்

அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்
ஆர். புதுப்பட்டினம்
மீமிசல் பகுதி
ஆவுடையார் கோவில் ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்புக்கு

தலைவர்: A.கலந்தர் பாட்ஷா - 9789113123

செயலாளர்: T.அப்துல்லாஹ் - 9655702514

பொருளாளர்: S. வாசிர் கான் - 8072213428

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : கலந்தர் பாட்ஷா

Post a Comment

0 Comments