ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள் கொண்டுவர ஏர் இந்தியா விமான நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தோர் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் இன்று முதல் புதிதாக தொடங்கியது. இந்த புதிய விமான சேவையை வரவேற்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், விமான சேவையை பார்வையிட அமீரகம் வந்திருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஸ்வானி லோகனி இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவரிடம், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செல்லும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள்களை கொண்டு செல்ல ஏர் இந்தியா விமான நிறுவனம் அனுமதி அளிக்கவேண்டும் என அமீரகம் வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்தியர்களின் வேண்டுகோளையத்து பேசிய அஸ்வானி லோகனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ சுமை வரை கொண்டு செல்லலாம் என அனுமதி வழங்கினார்.
ஏற்கனவே 30 கிலோ சுமை வரை கொண்டு செல்ல அனுமதி இருந்தநிலையில் தற்போது அந்த அளவு 40 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது.
நன்றி: மாலை மலர்
https://www.maalaimalar.com/news/topnews/2019/07/16200418/1251353/Air-India-passengers-travelling-to-UAE-can-now-carry.vpf
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தோர் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் இன்று முதல் புதிதாக தொடங்கியது. இந்த புதிய விமான சேவையை வரவேற்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், விமான சேவையை பார்வையிட அமீரகம் வந்திருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஸ்வானி லோகனி இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவரிடம், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செல்லும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள்களை கொண்டு செல்ல ஏர் இந்தியா விமான நிறுவனம் அனுமதி அளிக்கவேண்டும் என அமீரகம் வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்தியர்களின் வேண்டுகோளையத்து பேசிய அஸ்வானி லோகனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ சுமை வரை கொண்டு செல்லலாம் என அனுமதி வழங்கினார்.
ஏற்கனவே 30 கிலோ சுமை வரை கொண்டு செல்ல அனுமதி இருந்தநிலையில் தற்போது அந்த அளவு 40 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது.
நன்றி: மாலை மலர்
https://www.maalaimalar.com/news/topnews/2019/07/16200418/1251353/Air-India-passengers-travelling-to-UAE-can-now-carry.vpf
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.