ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் அனைத்து பயணிகளும் கூடுதலாக 10 கிலோ பொருள் கொண்டுவர முடியாது.. ஏர் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது!!!



ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள் கொண்டுவர ஏர் இந்தியா விமான நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது என மாலை மலர் மற்றும் துபாய் Kaaleej Times செய்தியில் வந்திருந்ததின் அடிப்படையில் நாம் செய்தி வெளிட்டிருந்தோம்.
ஆனால் இந்த செய்தி தவறானது என ஏர் இந்திய விமான நிறுவன செய்தி தொடர்பாளர்  தனஞ்சய் குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதாவது இந்த வாரம் தொடங்கப்பட்ட துபாய்-இந்தூர் மற்றும் இந்தூர்-துபாய் விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே 10 கிலோ கூடுதல் சாமான்கள் அனுமதிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments