குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான சர்வதேச தரச் சான்றிதழ் பெற சிறப்பு மானியத் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் சர்வதேச போட்டித் தன்மையினை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக இந்நிறுவனங்கள் சர்வதேச தரச் சான்றிதழ்கள் பெற ஏற்படும் செலவின் தொகையில் ஒவ்வொரு சான்றிதழுக்கும் 100 சதவிகிதம் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை ஈடு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்நிறுவனங்கள் சான்றிதழ் அமைப்புகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மூலமாக சர்வதேச தரச்சான்று பெற்றிருத்தல் அவசியம்.
தர நிர்ணய சான்றிதழ் பெற்ற நாளிலிருந்து ஒரு ஆண்டுக்குள் புதுக்கோட்டை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இம்மானியத்தைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ள தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மையம் பொதுமேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் சர்வதேச போட்டித் தன்மையினை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக இந்நிறுவனங்கள் சர்வதேச தரச் சான்றிதழ்கள் பெற ஏற்படும் செலவின் தொகையில் ஒவ்வொரு சான்றிதழுக்கும் 100 சதவிகிதம் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை ஈடு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்நிறுவனங்கள் சான்றிதழ் அமைப்புகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மூலமாக சர்வதேச தரச்சான்று பெற்றிருத்தல் அவசியம்.
தர நிர்ணய சான்றிதழ் பெற்ற நாளிலிருந்து ஒரு ஆண்டுக்குள் புதுக்கோட்டை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இம்மானியத்தைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ள தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மையம் பொதுமேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.