கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாபட்டிணம் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர்



புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் குறைந்ததைத் தொடர்ந்து மீனவர்கள் திங்கள்கிழமை மீண்டும் கடலுக்குச் சென்றனர்.

கடந்த ஒரு வாரகாலமாக  கடுமையான காற்று வீசி வந்த காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன்வளத்துறையினர் கடந்த 3-ம் தேதி முதல் விசைப்படகுகளை கடலுக்கு செல்ல அனுதியளிக்கவில்லை.

இதன் காரணமாக  புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளான கோட்டைப்பட்டிணம், ஜெகதாபட்டிணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைபடகுகளை கரையில் நிறுத்தி வைத்திருந்தனர். இதன் காரணமாக மீன்பிடி தொழிலை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பெரும்  இழப்பு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது காற்றின் வேகம்  சற்று தணிந்த காரணத்தால்  மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க  மீன்வளத்துறை அனுமதியளித்துள்ளது.  இதனால் இப் பகுதி மீனவர்கள் 5 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனர்.

Post a Comment

0 Comments