மாநில அளவில் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.உமாமகேஸ்வரி அவர்கள்
தெரிவித்ததாவது.
ஊரகப் பகுதிகளில் தனிப்பட்ட முறையில் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வரும் ஊரக கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்த மாநில அளவில் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-19 ஆம் ஆண்டிற்கான ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது பெற
தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகப் பகுதியைச்சேர்ந்த தகுதியானோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம் வயது வரம்பு ஏதுமில்லை. விண்ணப்பதாரர் கிராம ஊராட்சிப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாகவும் ஏதாவது ஒரு அறிவியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
பொது மக்களுக்கு பயன்தரத் தக்கதாக இருந்தால் மிகவும் வரவேற்கப்படும்.
2018-19 ஆம் ஆண்டிற்கு மாநில அளவில் இரு கண்டுபிடிப்பாளர்களுக்கு
இவ்விருது வழங்கப்படும். ஒரு கண்டுபிடிப்பாளருக்கு தலா ரூ.1,00,000 வீதம்
வழங்கப்படும். விண்ணப்பப் படிவம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில்
கிடைக்கப்பெறும். இவ்விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்தும் கண்டுபிடிப்பைப் பற்றி ஒருபக்க அளவில் அறிமுகமும், புகைப்படங்கள், கண்டுபிடிப்பைப் பற்றிய படக்காட்சிகளுடன் அந்தந்த வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் 31.08.2019 க்குள் வழங்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தெரிவித்ததாவது.
ஊரகப் பகுதிகளில் தனிப்பட்ட முறையில் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வரும் ஊரக கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்த மாநில அளவில் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-19 ஆம் ஆண்டிற்கான ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது பெற
தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகப் பகுதியைச்சேர்ந்த தகுதியானோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம் வயது வரம்பு ஏதுமில்லை. விண்ணப்பதாரர் கிராம ஊராட்சிப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாகவும் ஏதாவது ஒரு அறிவியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
பொது மக்களுக்கு பயன்தரத் தக்கதாக இருந்தால் மிகவும் வரவேற்கப்படும்.
2018-19 ஆம் ஆண்டிற்கு மாநில அளவில் இரு கண்டுபிடிப்பாளர்களுக்கு
இவ்விருது வழங்கப்படும். ஒரு கண்டுபிடிப்பாளருக்கு தலா ரூ.1,00,000 வீதம்
வழங்கப்படும். விண்ணப்பப் படிவம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில்
கிடைக்கப்பெறும். இவ்விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்தும் கண்டுபிடிப்பைப் பற்றி ஒருபக்க அளவில் அறிமுகமும், புகைப்படங்கள், கண்டுபிடிப்பைப் பற்றிய படக்காட்சிகளுடன் அந்தந்த வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் 31.08.2019 க்குள் வழங்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.