ஆகஸ்ட் 25 அன்று மத்திய அரசின் கருப்பு சட்டங்கள் மற்றும் கும்பல் படுகொலைகளை கண்டித்து சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் திருச்சியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டங்கள், முத்தலாக் தடைச் சட்டம், காஷ்மீர் மாநிலச் சிறப்பு அந்தஸ்து பறிப்புச் சட்டம் ஆகியவற்றை கண்டித்தும், கருப்புச் சட்டங்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்த உள்ளோம்.
இந்தச் சட்டங்களால் காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை காஷ்மீரில் நுழைய வைப்பதற்காக இதுபோன்ற சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
முத்தலாக் சட்டம் சிவில் சட்ட வடிவில் இருந்தது. தற்போது கிரிமினல் குற்ற வடிவ சட்டமாக மாற்றியுள்ளனர். அதற்கு 3 ஆண்டு தண்டனை என்பது ஏற்க முடியாதது. மற்றொரு சட்டத்தால் தனி நபர் பயங்கரவாதி என்று அறிவிக்க அச்சட்டத்தில் வழிவகை உள்ளது. பல சட்டங்கள் மூலம் மாநில உரிமைகளைப் பறித்துள்ளனர்.
இவற்றை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும், மனித நேய மக்கள் கட்சியும் இணைந்து ஆகஸ்ட் 25- ஆம் தேதி திருச்சி, மதுரை, சென்னை, திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 1995-யில் முதன்முதலாக தடா என்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக 1995 ஆகஸ்ட் 25 முதன்முதலாலக அன்று பேரணி நடத்தியது.
தனது வெள்ளி விழா ஆண்டான 2019 ஆகஸ்ட் 25 அன்று மத்திய அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டங்கள், முத்தலாக் தடைச் சட்டம், காஷ்மீர் மாநிலச் சிறப்பு அந்தஸ்து பறிப்புச் சட்டம் ஆகியவற்றை கண்டித்தும், கருப்புச் சட்டங்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்த உள்ளோம்.
இந்தச் சட்டங்களால் காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை காஷ்மீரில் நுழைய வைப்பதற்காக இதுபோன்ற சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
முத்தலாக் சட்டம் சிவில் சட்ட வடிவில் இருந்தது. தற்போது கிரிமினல் குற்ற வடிவ சட்டமாக மாற்றியுள்ளனர். அதற்கு 3 ஆண்டு தண்டனை என்பது ஏற்க முடியாதது. மற்றொரு சட்டத்தால் தனி நபர் பயங்கரவாதி என்று அறிவிக்க அச்சட்டத்தில் வழிவகை உள்ளது. பல சட்டங்கள் மூலம் மாநில உரிமைகளைப் பறித்துள்ளனர்.
இவற்றை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும், மனித நேய மக்கள் கட்சியும் இணைந்து ஆகஸ்ட் 25- ஆம் தேதி திருச்சி, மதுரை, சென்னை, திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 1995-யில் முதன்முதலாக தடா என்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக 1995 ஆகஸ்ட் 25 முதன்முதலாலக அன்று பேரணி நடத்தியது.
தனது வெள்ளி விழா ஆண்டான 2019 ஆகஸ்ட் 25 அன்று மத்திய அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.