புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ். அந்தோனிராஜ் (39), என். கோவிந்தன் (60), கே. செல்வம் (45), ஜ. நவாஸ் (25) ஆகிய நால்வரும் அந்தோனிராஜுவுக்குச் சொந்தமான ஒரு விசைப்படகில் புதன்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
இவர்கள் நால்வரையும் நெடுந்தீவு அருகே சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.
நால்வரையும் இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைத்து விசாரணை நடத்தப்படுவதாக மீமிசல் கடற்கரை காவல் படையினர் தெரிவித்தனர்.
புதன்கிழமை மட்டும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 142 விசைப்படகுகள் உரிய அனுமதி பெற்று மீன்பிடிக்கச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ். அந்தோனிராஜ் (39), என். கோவிந்தன் (60), கே. செல்வம் (45), ஜ. நவாஸ் (25) ஆகிய நால்வரும் அந்தோனிராஜுவுக்குச் சொந்தமான ஒரு விசைப்படகில் புதன்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
இவர்கள் நால்வரையும் நெடுந்தீவு அருகே சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.
நால்வரையும் இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைத்து விசாரணை நடத்தப்படுவதாக மீமிசல் கடற்கரை காவல் படையினர் தெரிவித்தனர்.
புதன்கிழமை மட்டும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 142 விசைப்படகுகள் உரிய அனுமதி பெற்று மீன்பிடிக்கச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.