கோட்டைப்பட்டினத்தில் 4/08/2019 அன்று மாபெரும் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி



தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) முதல் பேரிடர் ஒத்திகைப் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியானது மாநிலத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 14 இடங்களில் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபால் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களில் பேரிடர் ஒத்திகைப் பயிற்சி வரும் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஒத்திகைப் பயிற்சியானது, ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் சங்கத்து ஆலமரத்தில் வருகின்ற 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி அளவில் மாபெரும் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும், உயர்திரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும், உயர்திரு அறந்தாங்கி உட்கோட்ட கோட்டாட்சியர் அவர்களும் மற்றும் ஏனைய துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கோட்டைப்பட்டினம் பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டார ஊர் வாசிகள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேரிடர் மீட்பு காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் தாங்கள் மற்றவர்களை தற்காப்பது எப்படி என்றும் தெளிவுபடுத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு...
ஜிம் சரீப் அப்துல்லா (தலைவர்)
பெற்றோர் ஆசிரியர் கழகம் அரசு மேல்நிலைப்பள்ளி,
கூட்டுறவு வங்கி இயக்குனர்,
முஸ்லீம் ஜமாத் (வக்ஃபு)நிர்வாகி,
கோட்டைப்பட்டினம்,

Post a Comment

0 Comments