அம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு..



தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28 இருந்து ரூ.32ஆக, அதாவது லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.

எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றிற்கு ரூ.35 இருந்து ரூ.41 ஆக, அதாவது லிட்டர் ஒன்றிற்கு 6 உயர்த்தப்படுகிறது.

அதேபோல், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு வரும் நாளை (திங்கள்) முதல் அமலுக்கு வருகிறது.

Post a Comment

0 Comments