கலெக்டர் உமா மகேஸ்வரி முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் பதிவு செய்யப்பட்ட பாசனதாரர் சங்கத்தினருக்கான சிறப்பு முகாம், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் பதிவு செய்யப்பட்ட பாசனதாரர் சங்கத்தினருக்கான சிறப்பு முகாம், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
முகாமில் உதவி பொறியாளர் உமாசங்கர், வங்கி அலுவலர்கள், வணிகவரித்துறை அலுவலர்கள் மற்றும் பாசனதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
குடிமராமத்து பணிகளானது பதிவு செய்யப்பட்ட பாசனதாரர்கள் சங்கம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியை சிறந்த முறையில் செயல்படுத்தும் வகையில் மேற்கண்ட சங்கங்கள் கூட்டு வங்கி கணக்கு தொடங்குதல், பான் எண் பெறுதல், ஜி.எஸ்.டி. எண் பெறுதல் ஆகியவை தொடர்பான சிறப்பு முகாம்கள் மாவட்டந்தோறும் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 46 பாசனதாரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதேபோல் பாசன தாரர்களுக்கு முதல்- அமைச்சரின் குடிமராமத்து திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் பதிவு செய்யப்பட்ட பாசனதாரர் சங்கத்தினருக்கான சிறப்பு முகாம், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
முகாமில் உதவி பொறியாளர் உமாசங்கர், வங்கி அலுவலர்கள், வணிகவரித்துறை அலுவலர்கள் மற்றும் பாசனதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
குடிமராமத்து பணிகளானது பதிவு செய்யப்பட்ட பாசனதாரர்கள் சங்கம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியை சிறந்த முறையில் செயல்படுத்தும் வகையில் மேற்கண்ட சங்கங்கள் கூட்டு வங்கி கணக்கு தொடங்குதல், பான் எண் பெறுதல், ஜி.எஸ்.டி. எண் பெறுதல் ஆகியவை தொடர்பான சிறப்பு முகாம்கள் மாவட்டந்தோறும் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 46 பாசனதாரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதேபோல் பாசன தாரர்களுக்கு முதல்- அமைச்சரின் குடிமராமத்து திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.