புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்காத வெளியூரில் வசிக்கும் விவசாயிகள் பட்டியலை மாவட்ட நிர்வாகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000 ஊக்கத்தொகை அளிக்கும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்திற்கு; தகுதியான விவசாயிகள் விண்ணப்பிப்பதற்கான பணி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஊக்கத்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 1,20,332 விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். வருவாய்த்துறை அலுவலர்களின் களப்பணியின் போது 38,203 விவசாயிகள் வெளியூரில் வசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளின் பட்டியல் மற்றும் வெளியூரில் வசிக்கும் விவசாயிகளின் பட்டியல் www.pudukkottai.tn.nic.in என்ற இணையதளத்தில் வட்டவாரியாக வெளியிடப்பட்டுள்ளது. வெளியூரில் வசிக்கும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது வட்டாட்சியரிடமோ விண்ணப்பித்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிராமத்தில் இல்லாத விவசாயிகள் விபரம்:
https://pudukkottai.nic.in/ta
பயனாளிகளின் விபரம்:
https://pudukkottai.nic.in/ta
Source: https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/08/2019081263.pdf
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000 ஊக்கத்தொகை அளிக்கும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்திற்கு; தகுதியான விவசாயிகள் விண்ணப்பிப்பதற்கான பணி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஊக்கத்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 1,20,332 விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். வருவாய்த்துறை அலுவலர்களின் களப்பணியின் போது 38,203 விவசாயிகள் வெளியூரில் வசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளின் பட்டியல் மற்றும் வெளியூரில் வசிக்கும் விவசாயிகளின் பட்டியல் www.pudukkottai.tn.nic.in என்ற இணையதளத்தில் வட்டவாரியாக வெளியிடப்பட்டுள்ளது. வெளியூரில் வசிக்கும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது வட்டாட்சியரிடமோ விண்ணப்பித்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிராமத்தில் இல்லாத விவசாயிகள் விபரம்:
https://pudukkottai.nic.in/ta
பயனாளிகளின் விபரம்:
https://pudukkottai.nic.in/ta
Source: https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/08/2019081263.pdf
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.