மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவத் தொழிலாளர்கள் சார்பில் கோட்டைப்பட்டினத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீனவர்களையும் மீன் வளத்தையும் காக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஏஐடியுசி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மீனவர் சங்க மாவட்டச் செயலர் பகுருதீன் அலி தலைமை வகித்தார். ரஹமத்தலி முன்னிலை வகித்தார்.
மாவட்டத் துணைச் செயலர் அ. ராஜேந்திரன் தொடக்கவுரையாற்றினார், மீனவர் சங்க மாவட்டத் தலைவர் வி. சிங்கமுத்து நிறைவுரையாற்றினார்.
கடல் வளத்தை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை நிறுத்த வேண்டும், மீன்பிடித் தடைகால நிவாரண நிதியை ரூ. 15 ஆயிரமாக தமிழக அரசு வழங்க வேண்டும், செல்லநேந்தல், ஜெகதாபட்டினம் துறைமுகத்தை உடனடியாகத் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் பிரதிநிதிகள் சுப்பிரமணியன், செல்வராஜ், ராஜாமுகமது, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் கே. ராஜேந்திரன் விவசாய சங்க ஒன்றியப் பிரதிநிதி கரு. தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மீனவர்களையும் மீன் வளத்தையும் காக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஏஐடியுசி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மீனவர் சங்க மாவட்டச் செயலர் பகுருதீன் அலி தலைமை வகித்தார். ரஹமத்தலி முன்னிலை வகித்தார்.
மாவட்டத் துணைச் செயலர் அ. ராஜேந்திரன் தொடக்கவுரையாற்றினார், மீனவர் சங்க மாவட்டத் தலைவர் வி. சிங்கமுத்து நிறைவுரையாற்றினார்.
கடல் வளத்தை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை நிறுத்த வேண்டும், மீன்பிடித் தடைகால நிவாரண நிதியை ரூ. 15 ஆயிரமாக தமிழக அரசு வழங்க வேண்டும், செல்லநேந்தல், ஜெகதாபட்டினம் துறைமுகத்தை உடனடியாகத் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் பிரதிநிதிகள் சுப்பிரமணியன், செல்வராஜ், ராஜாமுகமது, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் கே. ராஜேந்திரன் விவசாய சங்க ஒன்றியப் பிரதிநிதி கரு. தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.