கோட்டைப்பட்டினத்தில் நாளை 04/08/2019 மாபெரும் விளையாட்டுப் போட்டி!



கோட்டைப்பட்டினம் காவல்துறையின் சார்பாக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்தும் மாபெரும் விளையாட்டு போட்டி நாளை  (04-08-2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் கபடி, கால்பந்து (football), மற்றும் கைப்பந்து (Volleyball) ஆகிய போட்டிகள் நடக்க உள்ளது எனவே இந்த போட்டிகளில் இளைஞர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் செல்லுமாறு உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

மேலும் இந்த போட்டிகளில் விளையாட ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனே தங்களது அணி பெயர்களை முன்பதிவு செய்யும் படி உங்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய அணியின் இளைஞர்களுக்கு திருச்சி காவல் துறை மத்திய மண்டல துணை தலைவர் அவர்களும், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும், கோட்டைப்பட்டினம் துணை கண்காணிப்பாளர் அவர்களும், கோட்டைப்பட்டினம் காவல் ஆய்வாளர் அவர்களும்,

பரிசுகளை வழங்கி கௌரவிப்பார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு..
ஜிம் சரீப் அப்துல்லா (தலைவர்)
பெற்றோர் ஆசிரியர் கழகம் அரசு மேல்நிலைப்பள்ளி,
கூட்டுறவு வங்கி இயக்குனர்,
முஸ்லீம் ஜமாத் (வக்ஃபு)நிர்வாகி,
கோட்டைப்பட்டினம்.

Post a Comment

0 Comments