புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் தமிழக அரசின் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் பெற தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டிற்கு விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கறவைப் பசுகள் வழங்க சித்தன்னவாசல், கோதண்டராமபுரம், வன்னியம்பட்டி, இரும்பாநாடு, மஞ்சக்குடி, கட்டுமாவடி, பாத்தம்பட்டி மற்றும் காயாம்பட்டி ஆகிய 8 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வெள்ளாடுகள் வழங்க கோத்திராப்பட்டி, ஏகபெருமகளூர், கன்னங்காரகுடி, மங்கனூர், குளந்திராபட்டு, நாஞ்சூர், கொன்னைப்பட்டி, மணவிடுதி, லெம்பலக்குடி, குமாரமங்கலம், கம்மங்காடு, கும்மங்குடி, மழையூர், ஒடுகம்பட்டி, மங்களத்துப்பட்டி, குன்னத்தூர், கட்டக்குடி, கொடிவயல், லெட்சுமணன்பட்டி, குடுமியான்மலை, கோங்குடி, மதியாணிபட்டி, குளத்தூர், மண்டையூர், குரும்பூர், மருதம்பட்டி, மங்களநாடு, மணவேளாம்பட்டி, மாங்குடி, மதகம், பெருநாவலூர், முதுகுளம் மற்றும் மாங்கோட்டை ஆகிய 33 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியல் கிராம சபைக் கூட்டங்களில் இறுதி செய்யப்படவுள்ளது. எனவே, அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், நிலமற்ற விவசாயிகள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் அரசு கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டிற்கு விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கறவைப் பசுகள் வழங்க சித்தன்னவாசல், கோதண்டராமபுரம், வன்னியம்பட்டி, இரும்பாநாடு, மஞ்சக்குடி, கட்டுமாவடி, பாத்தம்பட்டி மற்றும் காயாம்பட்டி ஆகிய 8 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வெள்ளாடுகள் வழங்க கோத்திராப்பட்டி, ஏகபெருமகளூர், கன்னங்காரகுடி, மங்கனூர், குளந்திராபட்டு, நாஞ்சூர், கொன்னைப்பட்டி, மணவிடுதி, லெம்பலக்குடி, குமாரமங்கலம், கம்மங்காடு, கும்மங்குடி, மழையூர், ஒடுகம்பட்டி, மங்களத்துப்பட்டி, குன்னத்தூர், கட்டக்குடி, கொடிவயல், லெட்சுமணன்பட்டி, குடுமியான்மலை, கோங்குடி, மதியாணிபட்டி, குளத்தூர், மண்டையூர், குரும்பூர், மருதம்பட்டி, மங்களநாடு, மணவேளாம்பட்டி, மாங்குடி, மதகம், பெருநாவலூர், முதுகுளம் மற்றும் மாங்கோட்டை ஆகிய 33 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியல் கிராம சபைக் கூட்டங்களில் இறுதி செய்யப்படவுள்ளது. எனவே, அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், நிலமற்ற விவசாயிகள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் அரசு கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பிக்கலாம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.