NIA,UAPA,RTI, சட்டத்திருத்தம், காஷ்மீர் மாநில உரிமை பறிப்பை கண்டித்து அம்மாபட்டினத்தில் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு SDPI போராட்டம்!



புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினத்தில் நேற்று மதியம் 2.15 மணியளவில் NIA,UAPA,RTI, சட்டத்திருத்தம், காஷ்மீர் மாநில உரிமை பறிப்பை கண்டித்து தபால் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் சகோதரர். சாலிஹ் மரைக்காயர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் SRM.சர்புதீன் அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் முற்றுகையிட்ட 37 பேரை மணமேல்குடி போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் போலீசார் விடுவித்தனர்.



தேசம் முழுவதும்... பாசிசமே இந்தியவைவிட்டு_வெளியேறு என்கிற முழக்கத்தோடு...

வெள்ளையனே_வெளியேறு இயக்கம் தொடங்கிய அதே நாளிலிருந்து (09.08.1942)

SDPI கட்சி முன்னெடுக்கிறது... 09.08.2019 அன்று FACISM_QUIT_INDIA MOMENT -ஐ துவக்குகிறது...

ஒருங்கிணைவோம்...! வென்றெடுப்போம்...!!

ஒருங்கிணைவோம்...! வென்றெடுப்போம்...!!

நாசகாரசக்திகளைவெளியேற்றும்வரைபோராடுவோம்...!!

Post a Comment

0 Comments