புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 14.09.2019 பொது விநியோகத் திட்ட குறைகேட்பு



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், செப்.14- ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று தீர்வு  காணவும் மாதந்தோறும் 2- ஆவது  சனிக்கிழமைகளில் குறைகேட்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழ் மாதத்துக்கான கூட்டம்   செப்டம்பர் 14-ஆம் தேதி  அனைத்து வட்டங்களிலும் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறஉள்ளது.

வட்டத்தின் பெயர், முகாம் நடைபெறும் கிராமம் என்ற அடிப்படையில் விவரம்:

ஆவுடையார்கோவில்- வேதினிவயல்,

மணமேல்குடி- பில்லங்குடி,

புதுக்கோட்டை- தென்னத்திரையன்பட்டி,

ஆலங்குடி- சூரன்விடுதி,

திருமயம்- ஆத்தூர்,

குளத்தூர்- சத்தியமங்கலம்,

இலுப்பூர்- விசலூர்,

கந்தர்வகோட்டை- புதுநகர்,

அறந்தாங்கி- சிதம்பரவிடுதி,

பொன்னமராவதி- கீழக்குறிச்சிப்பட்டி,

கறம்பக்குடி- திருப்பாக்கோவில்,

விராலிமலை- வெம்மணி.

சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று, குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.

Post a Comment

0 Comments