சவுதி அரேபியா ரியாத்தில் நடைபெற்ற 27-வது மாதாந்திர குடும்ப நிகழ்ச்சி



சவூதி அரேபியா, ரியாத் தலைநகர் பத்ஹா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தின் 27-வது மாதாந்திர குடும்ப நிகழ்ச்சி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள பத்ஹா ஜீம்ஆ மஸ்ஜிதின் மேல் தளத்தில் 26.09.2019 வியாழக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.


இந்த நிகழ்வில் மெளலவி. அபுல் ஹசன் மதனி அவர்கள் முன்னுரை நிகழ்த்தினார்.



மெளலவி.நூஹ் அல்தாஃபி அவர்கள் இறை தூதர் இட்ட 7 கட்டளைகள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சி இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் கூறியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த கலீல் ரகுமான், ரிபாய்தீன் மற்றும் ஏராளமானோர் சவூதி அரேபியா வாழ் இந்திய மற்றும் இலங்கை தமிழ் சகோதரர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

தகவல்: கலீல் ரகுமான்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments