சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் 30 நாள்களுக்கு மொத்தமாக சேர்த்து மாத்திரைகள் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் இச்சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவர் எம். முத்தையா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பி. ஆழ்வாரப்பன், என். ராமச்சந்திரன், ஆர். ராஜேந்திரசிங், ஆர். சுப்பிரமணியன், எம். வெள்ளைச்சாமி, கே. சதாசிவம், ஆர். முருகேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதுக்கோட்டை நகர குடியிருப்புகளில் இருந்து போக்குவரத்து வசதிக்காக ஷேர் ஆட்டோக்களை இயக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் பிரச்னையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தற்போது 15 நாள்களுக்கு ஒரு முறை அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
பெரும்பாலும் வயதானவர்களே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு 30 நாள்களுக்கும் சேர்த்து மொத்தமாக மாத்திரைகள் வழங்க மருத்துவத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டையில் இச்சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவர் எம். முத்தையா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பி. ஆழ்வாரப்பன், என். ராமச்சந்திரன், ஆர். ராஜேந்திரசிங், ஆர். சுப்பிரமணியன், எம். வெள்ளைச்சாமி, கே. சதாசிவம், ஆர். முருகேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதுக்கோட்டை நகர குடியிருப்புகளில் இருந்து போக்குவரத்து வசதிக்காக ஷேர் ஆட்டோக்களை இயக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் பிரச்னையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தற்போது 15 நாள்களுக்கு ஒரு முறை அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
பெரும்பாலும் வயதானவர்களே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு 30 நாள்களுக்கும் சேர்த்து மொத்தமாக மாத்திரைகள் வழங்க மருத்துவத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.