மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் நேற்று தொடங்கியது.
3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 12 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல அலுவலக முதன்மை மேலாளர் சத்தியநாராயணன் நேற்று காலை போட்டியை தொடங்கி வைத்தார்.
முதல் போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி 28-26, 33-35, 25-22 என்ற புள்ளிக்கணக்கில் ஜமால் முகமது கல்லூரி பி அணியை வென்றது.
2-வது ஆட்டத்தில் ஜமால் முகமது கல்லூரி ஏ அணி திண்டுக்கல் காந்திகிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக அணியை 25-15, 25-16 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.
3-வது போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 22-25, 25-23, 25-15 என்ற புள்ளிக்கணக்கில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணியை வென்றது.
4-வது போட்டியில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி அணி 25-18, 25-18 என்ற புள்ளிக்கணக்கில் கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியை வென்றது.
சென்னை லயோலா கல்லூரி அணி 25-21, 23-25, 25-13 என்ற புள்ளிக்கணக்கில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணியை வென்றது.
இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 12 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல அலுவலக முதன்மை மேலாளர் சத்தியநாராயணன் நேற்று காலை போட்டியை தொடங்கி வைத்தார்.
முதல் போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி 28-26, 33-35, 25-22 என்ற புள்ளிக்கணக்கில் ஜமால் முகமது கல்லூரி பி அணியை வென்றது.
2-வது ஆட்டத்தில் ஜமால் முகமது கல்லூரி ஏ அணி திண்டுக்கல் காந்திகிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக அணியை 25-15, 25-16 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.
3-வது போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 22-25, 25-23, 25-15 என்ற புள்ளிக்கணக்கில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணியை வென்றது.
4-வது போட்டியில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி அணி 25-18, 25-18 என்ற புள்ளிக்கணக்கில் கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியை வென்றது.
சென்னை லயோலா கல்லூரி அணி 25-21, 23-25, 25-13 என்ற புள்ளிக்கணக்கில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணியை வென்றது.
இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.