தீபாவளியை முன்னிட்டு காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்..!!!



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காரைக்குடி-சென்னைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத் தலைவர் என். ஜெயராமன், செயலாளர் வ. விவேகானந்தம் ஆகியோர் சென்னை ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கும், அதேபோல இதே வழித்தடத்தில் சென்னை-காரைக்குடிக்கும்  சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

அடுத்து, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெறும் தைப்பூச விழாவிற்கு, கடந்த பல ஆண்டுகளாக  பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து மேல்மருவத்தூருக்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பக்தர்கள் ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

 இதற்காக, மீட்டர்கேஜ் பாதையாக இருந்த காலத்திலேயே பட்டுக்கோட்டை-மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

 அதேபோல, தற்போதும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகலப் பாதையில்  பட்டுக்கோட்டை-மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர்-  பட்டுக்கோட்டை ஆகிய இரு முனைகளில் இருந்தும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments