புதுக்கோட்டை மாவட்ட சீர்மரபினர், நலவாரிய உறுப்பினர்கள் நல உதவிகள் பெறலாம்.



சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் சீர்மரபினர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சீர்மரபினர் இன மக்களுக்கு சீர்மரபினர் நலவாரியத்தின் மூலம் பதிவு செய்து நலவாரிய அட்டைகள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் விபரம் பின்வருமாறு.

விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம், இயற்கை மரணம் ஏற்பட்டால் ரூ.15 ஆயிரம், ஈமச்சடங்கு செலவினம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 10ம் வகுப்பு படித்துவரும் பெண் குழந்தைகளுக்கு ரூ. ஆயிரம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. ஆயிரம், 11ம் வகுப்பு படித்துவரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.ஆயிரம், 12ம் வகுப்பு படித்துவரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1,500, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1,500 முறையான பட்டப்படிப்புக்கு ரூ. 1,500, மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப்படிப்புக்கு ரூ.1750, முறையான பட்டமேற்படிப்பிற்கு ரூ.2 ஆயிரம், மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டமேற்படிப்பிற்கு ரூ.3 ஆயிரம், வழங்கப்பட்டு வருகிறது.தொழில்கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.2 ஆயிரம், மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.4 ஆயிரம், தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு ரூ.4 ஆயிரம், மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு ரூ.6 ஆயிரம், ஐ.டி.ஐ. அல்லது தொழிற்பயிற்சி படிப்புக்கு ரூ. ஆயிரம் மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ. அல்லது தொழிற்பயிற்சிப் படிப்புக்கு ரூ. 1200 ஆகிய கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ2 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வீதம் 6 மாதங்களுக்கு ரூ.6 ஆயிரம், கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு ரூ.3 ஆயிரம், வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மூக்குக்கண்ணாடி செலவுத் தொகையை ஈடுசெய்தல் ரூ.500, முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ. ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே சீர்மரபினர் நல வாரிய பதிவு பெற்ற உறுப்பினர்கள் இத்திட்டங்களின் கீழான தங்களது, கோரிக்கை குறித்து புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் இதுவரை சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விடுபட்ட சீர்மரபினர் இனமக்கள், புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் உடனடியாக தங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments