தமிழகத்தில் டெங்கு அச்சுறுத்தி வரும் நிலையில் சென்னை மாநகரில் 360 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவ மழை தொடங்கியதோடு கூடவே டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. வருட வருடம் டெங்கு தாக்கத்தினால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் என்பது நேரடியாக உயிரிழப்பை ஏற்படுத்தாது, முன் கூட்டியே அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் அதைக் குணப்படுத்த முடியும் என பல்வேறு விழிப்புணர்வுகளிலும் கூறி வருகின்றனர்.
தமிழக அரசும் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றது. ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கென தனி வார்டு ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் டெங்கு காய்ச்சலால் சிறு குழந்தைகள் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சென்னையில் 360 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சமீபத்தில் கூட சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் - கவிதா தம்பதியரின் மகாலட்சுமி என்ற 6 வயது பெண் குழந்தை டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் அக்குழந்தை இறந்து போன செய்தி பேரிடியைக் கொடுத்தது.
தமிழகத்தில் பருவ மழை தொடங்கியதோடு கூடவே டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. வருட வருடம் டெங்கு தாக்கத்தினால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் என்பது நேரடியாக உயிரிழப்பை ஏற்படுத்தாது, முன் கூட்டியே அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் அதைக் குணப்படுத்த முடியும் என பல்வேறு விழிப்புணர்வுகளிலும் கூறி வருகின்றனர்.
தமிழக அரசும் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றது. ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கென தனி வார்டு ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் டெங்கு காய்ச்சலால் சிறு குழந்தைகள் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சென்னையில் 360 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சமீபத்தில் கூட சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் - கவிதா தம்பதியரின் மகாலட்சுமி என்ற 6 வயது பெண் குழந்தை டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் அக்குழந்தை இறந்து போன செய்தி பேரிடியைக் கொடுத்தது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.