கோட்டைப்பட்டிணத்தில் KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் சார்பாக நடைபெற்ற மரம் நடும் விழா மற்றும் பனை விதை விதைக்கும் நிகழ்வு



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் சுற்றுசூழல் மற்றும் நிலத்தடிநீரை பாதுகாக்கும் விதமாக KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் சார்பாக 02/09/2019 திங்கள்கிழமை அன்று கோட்டைப்பட்டிணம் பெரியபள்ளிவாசலை சுற்றிலும் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.
மேலும் கோட்டைப்பட்டிணம் பகுதிகளில் உள்ள தர்கா ஆற்றுவாரி, சாலை குளம் மற்றும் கருத்தான் குளம் ஆகிய இடங்களில் ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டது. இதில் கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த தன்னார்வலர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை விதைத்தனர்.

ஒரு சில ஊர்களில் உள்ள இளைஞர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் இந்த காலகட்டத்தில் ஊர் நலனை கருத்தில் கொண்டு நிலத்தடி நீர் மற்றும் சுகாதாரமான சுற்றுசூழலை உருவாக்கிட செயல்படும் KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் இளைஞர்களுக்கு GPM மீடியாவின் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் FACEBOOK பக்கத்தை Like செய்து கொள்ளுங்கள்

https://www.facebook.com/GpmMedia/

வாட்ஸ்ஆப்-பில் தொடர்பு கொள்ள

https://wa.me/918270282723









Post a Comment

0 Comments