பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினத்தில் பழனிமாணிக்கம் எம்பியிடம் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு விரைவு ரயில்களை இயக்கக் கோரி வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ். எஸ். பழனிமாணிக்கம் வெள்ளிக்கிழமை இரவு பட்டுக்கோட்டைக்கு வந்தார்.
இங்குள்ள அரசு பயணியர் விடுதியில் தங்கியிருந்த அவரிடம் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத் தலைவர் என். ஜெயராமன், செயலர் வ. விவேகானந்தம், மக்கள் தொடர்பாளர் எம். கலியபெருமாள், தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் எஸ். ஸ்ரீதர் ஆகியோர் அளித்த கோரிக்கை மனு விவரம்:
காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக இரவு மற்றும் பகல் நேர விரைவு ரயில்களை இருமுனைகளில் இருந்தும் தினசரி இயக்க வேண்டும்.
திருவாரூர் - பட்டுக்கோட்டை- காரைக்குடி வழித்தடத்தில் ஏற்கெனவே மீட்டர் கேஜில் இயங்கிய அனைத்து பயணிகள் ரயில்களை தற்போதும் இயக்க வேண்டும்.
மேலும் இத்தடத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும் கேட் கீப்பர்களையும், ரயில் நிலையங்களுக்குத் தேவையான அலுவலர்கள், பணியாளர்களையும் உடனடியாக நியமிக்க வேண்டுமென மனுவில் கூறப்பட்டிருந்தது.
திமுக முன்னாள் எம்எல்ஏ கா. அண்ணாதுரை, பட்டுக்கோட்டை நகரப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.என். செந்தில்குமார், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வழக்குரைஞர் ஆர். ராமசாமி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஏ. ஆர். வீராசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக அதிராம்பட்டினம் சென்ற எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்பியிடம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அமைப்பினர் மனு அளித்தனர்.
இதையடுத்து அவர் தொக்காலிகாடு கிராமத்தில் உள்ள ராஜாமடம் கிளை வாய்க்காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவரிடம் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் எஸ்.எச். அஸ்லம் தலைமையிலான குழுவினர் அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி வரை தண்ணீர் வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.
மேலும், அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லும் சி.எம்.பி வாய்க்கால் இணைப்பில் இருந்து மரைக்கா குளத்திற்கு தண்ணீர் செல்லும் 100 மீட்டர் தொலைவுக்கு வடிகால் அமைக்கும் திட்டத்தின் அவசியம் குறித்தும் அவரிடம் விளக்கினர்.
அப்போது, திமுக முன்னாள் எம்எல்ஏ கா. அண்ணாதுரை, பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலர் பா. ராமநாதன், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ராம. குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ். எஸ். பழனிமாணிக்கம் வெள்ளிக்கிழமை இரவு பட்டுக்கோட்டைக்கு வந்தார்.
இங்குள்ள அரசு பயணியர் விடுதியில் தங்கியிருந்த அவரிடம் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத் தலைவர் என். ஜெயராமன், செயலர் வ. விவேகானந்தம், மக்கள் தொடர்பாளர் எம். கலியபெருமாள், தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் எஸ். ஸ்ரீதர் ஆகியோர் அளித்த கோரிக்கை மனு விவரம்:
காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக இரவு மற்றும் பகல் நேர விரைவு ரயில்களை இருமுனைகளில் இருந்தும் தினசரி இயக்க வேண்டும்.
திருவாரூர் - பட்டுக்கோட்டை- காரைக்குடி வழித்தடத்தில் ஏற்கெனவே மீட்டர் கேஜில் இயங்கிய அனைத்து பயணிகள் ரயில்களை தற்போதும் இயக்க வேண்டும்.
மேலும் இத்தடத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும் கேட் கீப்பர்களையும், ரயில் நிலையங்களுக்குத் தேவையான அலுவலர்கள், பணியாளர்களையும் உடனடியாக நியமிக்க வேண்டுமென மனுவில் கூறப்பட்டிருந்தது.
திமுக முன்னாள் எம்எல்ஏ கா. அண்ணாதுரை, பட்டுக்கோட்டை நகரப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.என். செந்தில்குமார், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வழக்குரைஞர் ஆர். ராமசாமி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஏ. ஆர். வீராசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக அதிராம்பட்டினம் சென்ற எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்பியிடம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அமைப்பினர் மனு அளித்தனர்.
இதையடுத்து அவர் தொக்காலிகாடு கிராமத்தில் உள்ள ராஜாமடம் கிளை வாய்க்காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவரிடம் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் எஸ்.எச். அஸ்லம் தலைமையிலான குழுவினர் அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி வரை தண்ணீர் வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.
மேலும், அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லும் சி.எம்.பி வாய்க்கால் இணைப்பில் இருந்து மரைக்கா குளத்திற்கு தண்ணீர் செல்லும் 100 மீட்டர் தொலைவுக்கு வடிகால் அமைக்கும் திட்டத்தின் அவசியம் குறித்தும் அவரிடம் விளக்கினர்.
அப்போது, திமுக முன்னாள் எம்எல்ஏ கா. அண்ணாதுரை, பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலர் பா. ராமநாதன், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ராம. குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.