அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் சகோதரரும், அமமுக புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து நிர்வாகிகள் பலரும் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அமமுகவில் இருந்த செந்தில் பாலாஜி அக்கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். அவருக்கு நடந்து முடிந்த அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியது. அதன்படி, தேர்தலில் வெற்றி கனியை ஈட்டி மீண்டும் எம்எல்ஏ ஆனார் செந்தில் பாலாஜி.
இதனிடையே மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாததால் பல்வேறு நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்தனர். முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்த அமமுக முக்கிய நிர்வாகிகளான வி.பி.கலைராஜன், தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலராக இருந்த பரணி கார்த்திகேயன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இவர் அறந்தாங்கி அதிமுக எம்.எல்.ஏ ரத்தின சபாபதியின் சகோதரர் ஆவார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த பரணி கார்த்திகேயன், "புதுக்கோட்டையில் மிகப்பெரிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளேன், அப்போது அமமுகவில் என்ன பிரச்சினை என்பதை தெளிவாக கூறுவேன். திமுக தலைமை மக்களுக்கும், எனக்கும் பிடித்துள்ளதால் திமுகவில் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இணைந்துள்ளேன்" என்றார்.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து நிர்வாகிகள் பலரும் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அமமுகவில் இருந்த செந்தில் பாலாஜி அக்கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். அவருக்கு நடந்து முடிந்த அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியது. அதன்படி, தேர்தலில் வெற்றி கனியை ஈட்டி மீண்டும் எம்எல்ஏ ஆனார் செந்தில் பாலாஜி.
இதனிடையே மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாததால் பல்வேறு நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்தனர். முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்த அமமுக முக்கிய நிர்வாகிகளான வி.பி.கலைராஜன், தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலராக இருந்த பரணி கார்த்திகேயன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இவர் அறந்தாங்கி அதிமுக எம்.எல்.ஏ ரத்தின சபாபதியின் சகோதரர் ஆவார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த பரணி கார்த்திகேயன், "புதுக்கோட்டையில் மிகப்பெரிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளேன், அப்போது அமமுகவில் என்ன பிரச்சினை என்பதை தெளிவாக கூறுவேன். திமுக தலைமை மக்களுக்கும், எனக்கும் பிடித்துள்ளதால் திமுகவில் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இணைந்துள்ளேன்" என்றார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.