R.புதுப்பட்டிணத்தில் நாளை 13.09.2019 சிறப்பு கிராம சபை கூட்டம்



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி R.புதுப்பட்டிணம் மீனவர் குடியிருப்பில் நாளை 13.09.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் ஊட்டச்சத்து இயக்கம் சார்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவிருக்கிறது.


சிறப்பு கிராமசபை கூட்டத்தின் சிறப்பம்சம்:-
  • நமது கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்தை நிலைநாட்டல்.
  • அங்கன்வாடி மையங்களில் BABY FRIENDLY TOILET இருப்பதை உறுதி செய்தல்.
  • ஆபத்து நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை உடனடியாக புனரமைத்தல்.
  • ஊராட்சி ஒன்றிய பள்ளிக் கட்டிடங்கள் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி உறுதி செய்தல்.
  • அங்கன்வாடி மையங்களில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி உள்ளதை உறுதி செய்தல்.
  • தனி நபர் சுகாதாரம் காத்திட, சாப்பாட்டிற்கு முன்பும், பிறகும், கைகளை கழுவி, சுத்தம் செய்வதன் அவசியம் குறித்து, பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தல்.
அதுசமயம் அந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கோபாலப்பட்டினம் மற்றும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் இருக்கும் அங்கன்வாடி மையங்களில் உள்ள குறைகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கீழ் உள்ள ஊர்கள்:
  1. கோபாலப்பட்டிணம்
  2. கணபதிப்பட்டிணம்
  3. குறிச்சிவயல்
  4. முத்துக்குடா(மீனவர்)
  5. நாட்டாணி
  6. ஆர்.புதுப்பட்டிணம்(மீனவர்)
  7. ஆர்.புதுப்பட்டிணம்(முஸ்லிம்)
  8. முத்துக்குடா(முஸ்லிம்)
  9. அண்டியப்பன்காடு
  10. கூடலூர்
  11. பாதரக்குடி
  12. புரசகுடி

Post a Comment

0 Comments