TNTJ சார்பாக மீமிசலில் நடைபெற்ற தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் பேரணி...



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மூன்று மாத கால தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக 31/08/2019 சனிக்கிழமை அன்று தீவிரவாத எதிர்ப்புப் பேரணி மீமிசல் SBI வங்கியில் தொடங்கி மீமிசல் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து முஹம்மது ஒலி MISC அவர்கள் இஸ்லாம் தீவிரவாதத்திற்க்கு எதிரானது என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் கலந்து கொண்டனர்.

இந்தப்பேரணியில் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் தீவிரவாதத்திற்கும் துளி அளவும் சம்பந்தமில்லை என்பதை முஸ்லிம்களின் அழுத்தமான குரலாக ஓங்கி ஒலித்து பேரணி நடைபெற்றது.

இப்படிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ECR பகுதி கிளைகள்
புதுக்கோட்டை மாவட்டம்

தகவல்: அப்துல் ரசாக்






Post a Comment

0 Comments