பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் மாதம் 15-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016-17ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மகசூல் இழப்புக்கு ஏற்றவாறு பயிர் இழப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட பயிர் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. நடப்பு 2019-20ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிரை சிறப்பு பருவமாக அறிவிக்கை செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
நடப்பு 2019-20ம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 762 வருவாய் கிராமங்கள், நெல் சம்பா பருவத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்டும் அக்ரிகல்சர் இன் சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்ற பயிர் காப்பீட்டு நிறுவனத்தை ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2019-20ம் ஆண்டிற்கு சம்பா நெற்பயிருக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ஏக்கருக்கு ரூ.29 ஆயிரமும், அரசாங்கத்தால் ஒப்பளிக்கப்பட்ட பிரிமிய தொகை ரூ.6 ஆயிரத்து 380-ம் ஆகும். விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை 1.5 சதவீதம் மட்டுமே. அதன்படி ஏக்கருக்கு ரூ.435 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள பிரிமியத்தொகை ரூ.5 ஆயிரத்து 945-ஐ மத்திய, மாநில அரசுகளால் சரிபாதியாக பிரித்து செலுத்தப்படும்.
இந்த திட்டத்தில் பயிர் கடன்பெறும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி ஆகும். எக்காரணத்தை முன்னிட்டும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின் பயிர் காப்பீடு செய்பவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படாது.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் அடங்கல், சிட்டா வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்த வேண்டும். பின்பு பணம் செலுத்தியதற்கான ரசீதை தொடர்புடைய பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் அருகிலுள்ள பொது சேவை மையங்கள் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016-17ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மகசூல் இழப்புக்கு ஏற்றவாறு பயிர் இழப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட பயிர் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. நடப்பு 2019-20ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிரை சிறப்பு பருவமாக அறிவிக்கை செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
நடப்பு 2019-20ம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 762 வருவாய் கிராமங்கள், நெல் சம்பா பருவத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்டும் அக்ரிகல்சர் இன் சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்ற பயிர் காப்பீட்டு நிறுவனத்தை ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2019-20ம் ஆண்டிற்கு சம்பா நெற்பயிருக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ஏக்கருக்கு ரூ.29 ஆயிரமும், அரசாங்கத்தால் ஒப்பளிக்கப்பட்ட பிரிமிய தொகை ரூ.6 ஆயிரத்து 380-ம் ஆகும். விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை 1.5 சதவீதம் மட்டுமே. அதன்படி ஏக்கருக்கு ரூ.435 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள பிரிமியத்தொகை ரூ.5 ஆயிரத்து 945-ஐ மத்திய, மாநில அரசுகளால் சரிபாதியாக பிரித்து செலுத்தப்படும்.
இந்த திட்டத்தில் பயிர் கடன்பெறும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி ஆகும். எக்காரணத்தை முன்னிட்டும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின் பயிர் காப்பீடு செய்பவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படாது.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் அடங்கல், சிட்டா வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்த வேண்டும். பின்பு பணம் செலுத்தியதற்கான ரசீதை தொடர்புடைய பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் அருகிலுள்ள பொது சேவை மையங்கள் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.