பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2019-20-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய 2 பிரிவுகளில் கீழ்க்கண்டுள்ள படி நடைபெற உள்ளது.
இளநிலைப் பிரிவு, மழலை வகுப்பு 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளும், முதுநிலைப் பிரிவு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளிலும் வருகிற 16-ந் தேதி காலை 9 மணி முதல் கேரம் போட்டிகள் நடைபெற உள்ளது.
ஆன்லைனில் பதிவு
மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக ஆன்லைனை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.
www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் வருகிற 15-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கேரம் போட்டிகளில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒற்றையர் பிரிவில் 7 மாணவர்களும், 7 மாணவிகளும், இரட்டையர் பிரிவில் 5 மாணவர்கள் அணி மற்றும் 5 மாணவிகள் அணிகளும் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து, தாங்கள் எந்த வகுப்பில் பயில்பவர் என்பதற்கான சான்றினை பெற்றுவர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2019-20-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய 2 பிரிவுகளில் கீழ்க்கண்டுள்ள படி நடைபெற உள்ளது.
இளநிலைப் பிரிவு, மழலை வகுப்பு 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளும், முதுநிலைப் பிரிவு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளிலும் வருகிற 16-ந் தேதி காலை 9 மணி முதல் கேரம் போட்டிகள் நடைபெற உள்ளது.
ஆன்லைனில் பதிவு
மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக ஆன்லைனை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.
www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் வருகிற 15-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கேரம் போட்டிகளில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒற்றையர் பிரிவில் 7 மாணவர்களும், 7 மாணவிகளும், இரட்டையர் பிரிவில் 5 மாணவர்கள் அணி மற்றும் 5 மாணவிகள் அணிகளும் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து, தாங்கள் எந்த வகுப்பில் பயில்பவர் என்பதற்கான சான்றினை பெற்றுவர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.