நாகூர் கடற்கரையில் குளித்த 4 பேர் அலையில் சிக்கி உயிரிழப்பு..!



நாகை மாவட்டம் நாகூர் கடற்கரையில் குளித்த 4 பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

பெங்களூருவை சேர்ந்த இம்தீயாஸ் பாட்சா என்பவர் குடும்பத்துடன் கடந்த 25-ம் தேதி நாகூர் தர்காவிற்கு சுற்றுலா வந்தார்.

 பிரார்த்தனை செய்துவிட்டு குடும்பத்தினருடன் நேற்று கடற்கரையில் குளித்துள்ளனர்.

அப்போது  இம்தீயாஸ் உள்பட 4 பேர் அலையில் சிக்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சானியா, அபராஸ் ஆகிய இருவரை உயிருடன் மீட்டனர்.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் வருவதற்கு ஒரு மணி நேரம் தாமதமானதால் அபராசும் பரிதாபமாக உயரிழந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல தனது தாய் தந்தையுடன் பெங்களூருவில் இருந்து சுற்றுலா வந்த 12 வயது ரிகான் என்ற சிறுவனும் அலையில் சிக்கி உயிரிழந்தான்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments