மீமிசல் அருகே செய்யானத்தில் நாய்கள் கடித்து புள்ளிமான் பலி



செய்யானம் கிராமத்தில் புதன்கிழமை வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமானை நாய்கள் துரத்திக் கடித்ததில் மான் உயிரிழந்தது.

செய்யானம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தபோது அதே பகுதியில் திரிந்த 5-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சேர்ந்து மானைத் துரத்திக் கடித்துள்ளன.

இதையடுத்து வயல்வெளியில் வேலை பார்த்த பொதுமக்கள் நாய்களை துரத்திவிட்டு நாய்கள் கடித்த புள்ளிமானை மீட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே மான் இறந்து விட்டது.

பின்னர் வந்த வனச்சரக அலுவலர் ராஜசேகரன்,கால் நடை மருத்துவர் பாலகிருஷ்ணன், உள்ளிட்டோர் புள்ளிமானை உடற்கூராய்வு செய்து அங்கேயே புதைத்தனர்.

 வேட்டை தடுப்புக் காவலர்கள் மரியம்சைமன், முத்துராமன் மற்றும் வனத்துறையினர் பொதுமக்கள் உடனிருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments