திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு புறப்பட தயாரான விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் தினமும் இரவு 9.35 மணிக்கு திருச்சிக்கு வரும். பின்னர் திருச்சியில் இருந்து இரவு 10.35 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு செல்லும். இந்நிலையில் இந்த விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் 10.10 மணிக்கு தரையிறங்கியது.
மீண்டும் அந்த விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டு, திருச்சி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 90 பயணிகள், விமான நிலையத்தின் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் அவதியடைந்தனர்.
90 பயணிகள்
இதில் 83 பேர், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணிக்கு மலேசியாவில் இருந்து திருச்சி வந்து, மீண்டும் மலேசியா புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதமிருந்த 7 பயணிகள் நேற்று காலை மலேசியா சென்ற ஏர் ஏசியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட ஏர் ஏசியா விமானம், கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று மதியம் 2.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து பயணிகள் இல்லாமல் மலேசியா நோக்கி புறப்பட்டு சென்றது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் தினமும் இரவு 9.35 மணிக்கு திருச்சிக்கு வரும். பின்னர் திருச்சியில் இருந்து இரவு 10.35 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு செல்லும். இந்நிலையில் இந்த விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் 10.10 மணிக்கு தரையிறங்கியது.
மீண்டும் அந்த விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டு, திருச்சி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 90 பயணிகள், விமான நிலையத்தின் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் அவதியடைந்தனர்.
90 பயணிகள்
இதில் 83 பேர், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணிக்கு மலேசியாவில் இருந்து திருச்சி வந்து, மீண்டும் மலேசியா புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதமிருந்த 7 பயணிகள் நேற்று காலை மலேசியா சென்ற ஏர் ஏசியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட ஏர் ஏசியா விமானம், கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று மதியம் 2.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து பயணிகள் இல்லாமல் மலேசியா நோக்கி புறப்பட்டு சென்றது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.