"குழந்தை சுஜித் உயிரிழப்பு” - ஆழ்துளைக் கிணற்றில் இருந்து உடல் மீட்பு..! கண்ணீர் சிந்தும் தமிழகம்



ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் உயிரிழப்பு.

வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.

ஆழ்துளை கிணற்றுக்குள் துர்நாற்றம் வீசுவதாக தகவல்.

இரவு 10.30 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து அழுகிய வாடை வெளிவந்தது.

80 மணி நேரமாக நீடித்த மீட்புப் பணி பலனளிக்கவில்லை.

சுஜித்தின் உடலை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆழ்துளையிடும் பணிகள் நிறுத்தம்- ஊழியர்கள் வாபஸ் பெறுகின்றனர்.

குழந்தை உடல் 88 அடிக்கும் கீழே சென்றதாக தகவல்.

சுஜித்தின் உடல் சிதைவடைந்து இருப்பதாக மருத்துவர்கள் குழு தகவல்.

 சுஜித் உடல்மீட்பு:

ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித் உடல் மீட்பு.

குழந்தையின் உடலை பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு கொண்டு சென்றனர்.

மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல்பாகம் கொண்டு செல்லப்படுகிறது.

ஆம்புலன்ஸ் மூலம் சுஜித்தின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்த 5வது நாளில் உடல் மீட்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் நீங்கா துயரம்... இனி இது போன்ற துயரங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு அனைவரும் துவா செய்வோம்...
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments