அரசநகரிப்பட்டிணம் வளர்பிறை நற்பணி மன்றம் சார்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம்…!



புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகாமையில் உள்ள அரசநகரிப்பட்டிணத்தில் வளர்பிறை நற்பணி மன்றம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் ஜும்மா பள்ளி அருகில் நேற்று 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது.

முகாமில்,  200- க்கும் மேற்பட்ட ஆண்களும் மற்றும் பெண்களும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் வந்திருந்த பொதுமக்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வாங்கி சென்றனர்.

இம்முகாமில், மேலாண்மை குழு, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்தனர்.

தகவல்: ஆசிக் இக்பால்





கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments