சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவைக்கு வருகிற 30-ந்தேதிவரை விமான சேவையை ரத்து செய்வதாக இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு தினந்தோறும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சென்று வருகின்றன.இந்த நகரங்களுக்கு செல்லும் இந்தியன் ஏர்லைன் விமான பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக இந்த உள்ளூர் விமான சேவை நடந்து வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு தினந்தோறும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சென்று வருகின்றன.இந்த நகரங்களுக்கு செல்லும் இந்தியன் ஏர்லைன் விமான பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக இந்த உள்ளூர் விமான சேவை நடந்து வருகிறது.
இதற்கு அலையன் ஏர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை செல்லும் விமானங்களிலும், அங்கிருந்து சென்னை வரும் விமானங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
இதையடுத்து, இந்த நகரங்களுக்கு வருகிற 30-ந்தேதிவரை விமான சேவையை ரத்து செய்வதாக இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் 12 விமான சேவை ரத்தாகிறது.
இதுகுறித்து இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
எனவே வருகிற 30-ந்தேதிவரை இந்த உள்ளூர் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளியூர் வெளிநாடு செல்லும் விமானங்களுக்கு தட்டுப்பாடு இருக்கிறது.
எனவே இங்கு நிறுத்தப்பட்ட விமானங்கள் வெளியூர் சேவைக்கு பயன்படுத்தப்படும். தற்போது சென்னையில் இருந்து வாரம் 3 நாட்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் யாழ்ப்பாணம் செல்கிறது. இந்த சேவை தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.