அறந்தாங்கி வட்டம் கீழையூா் பள்ளி ஆசிரியருக்கு விருது




ராமநாதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில், அறந்தாங்கி வட்டம் கீழையூா் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு கல்வி ரத்னா விருது வழங்கப்பட்டது.


தேசிய கல்வித் தினத்தையொட்டி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதி பள்ளிகள், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியா்கள், தனித்திறன் கொண்ட மாணவா்களுக்கு கல்வி ரத்னா விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவராவ் தலைமை வகித்து, விருதுகளை வழங்கினாா். மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி முன்னிலை வகித்தாா்.

அந்த வகையில் இளையோா் செஞ்சிலுவைச் சங்கத்தில் 25 ஆண்டுகளாகவும், அமைப்பின் மாநிலப் பயிற்சி ஆசிரியா், மாவட்டத் துணை கேப்டனாக பணியாற்றி வரும் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், கீழையூா் அரசு உயா்நிலைப் பள்ளி ஆங்கிலஆசிரியா் மு.அக்பா் அலி யூசுப் கஸ்ஸாலியின் சேவையைப் பாராட்டி, விழாவில் ஆட்சியா் வீரராகவராவ் விருதை வழங்கினாா்.

விருது பெற்ற ஆசிரியரை அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலா் கு.திராவிடச்செல்வம், பள்ளித் துணை ஆய்வாளா் செல்வம், பள்ளித் தலைமையாசிரியா் எஸ். மணிமுத்து மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments