புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா நெல்லுக்கு பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2019-20 ஆம் ஆண்டுக்கு சம்பா நெற்பயிருக்கு நிா்ணயிக்கப்பட்ட கடன் தொகை ஏக்கருக்கு ரூ.29 ஆயிரமும், அரசால் ஒப்பளிக்கபபட்ட பிரிமியத் தொகை ரூ.6,380-ம் ஆகும்.
விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை 1.5 சதவிகிதம் மட்டுமே. அதன்படி ஏக்கருக்கு ரூ.435 காப்பீட்டுக் கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள பிரிமியத் தொகை ரூ.5,945ஐ மத்திய, மாநில அரசுகளால் சரிபாதியாக பிரித்துச் செலுத்தப்படும்.
இந்தத் திட்டத்தில் பயிா்க் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும், அவா்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவா். கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்ய 15.12.2019 கடைசி நாளாகும்.
எக்காரணத்தை முன்னிட்டும் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின் பயிா்க் காப்பீடு செய்பவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாது.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையைத் தொடா்புடைய பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகளில் செலுத்தி அதற்குரிய ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.