ஊரக வளா்ச்சித் துறையில் காலிப் பணியிடங்கள்



புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநா் காலிப்பணியிடத்துக்கும், இரவுக் காவலா் பணியிடத்துக்கும் தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி கூறியது:

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநா் பணிக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் விண்ணப்பிக்கலாம். ஜூலை 1ஆம் தேதிப்படி 30 வயதுக்குள்பட்டவராக, 8ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இலகுரக, கனரக ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுக்கு குறையாத அனுபவம் வேண்டும்.

ஓா் இரவுக் காவலா் பணியிடத்துக்கு ஆதிதிராவிடா்- அருந்ததியினா் (பெண்) விண்ணப்பிக்கலாம். ஜூலை 1ஆம் தேதிப்படி 35 வயதுக்குள்பட்டவராக, எழுதப்படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு தனியே விண்ணப்பங்கள் கிடையாது. தகுதியுடையோா் வெள்ளைத்தாளில் தங்களின் விவரங்களை விண்ணப்பமாக எழுதி வரும் நவ. 25 மாலை 5.45 மணிக்குள்

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி),
வளா்ச்சிப் பிரிவு,
மாவட்ட ஆட்சியா் அலுவலகம், 
புதுக்கோட்டை 622 005 

என்ற முகவரியில் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நோ்காணலுக்கு கடிதம் அனுப்பப்படும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments